இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் முதலீடு; நான்கு கோடிகள் வருவாய்! அசத்தும் அஞ்சலி அகர்வால்!
22-Aug-2025
By உஷா பிரசாத்
குருகிராம்
ஐபிஎம் நிறுவனத்தின் முன்னாள் பொறியாளரான அஞ்சலி அகர்வால், அதிக சம்பளம் பெறும் வேலையில் இருந்து விலகி கோட்டா டோரியா பட்டு (Kota Doria Silk (KDS) என்ற நிறுவனத்தை வெறும் ரூ.25000 முதலீட்டில் கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கினார்.
இன்றைக்கு
அவர், தமது கேடிஎஸ் நிறுவனத்தை ஆண்டுக்கு ரூ.4 கோடி வருவாய்
ஈட்டும் நிறுவனமாக கட்டமைத்தது மட்டுமின்றி, ராஜஸ்தானின்
கோட்டா பகுதியின்
பாரம்பரியமிக்க பூர்வீகமான கோட்டா டோரியா பட்டு துணியை சர்வதேச சந்தைக்குக் கொண்டு
சென்றிருக்கிறார். கலைஞர்களுக்கும்
நெசவாளர்களுக்கும் பல வேலைவாய்ப்புகளை அளித்துள்ளார்.
ரூ.25 ஆயிரம்
முதலீட்டில் 2014ஆம் ஆண்டு கோட்டா டோரியா சில்க் நிறுவனத்தை
அஞ்சலி அகர்வால் தொடங்கினார். (புகைப்படங்கள்: சிறப்பு
ஏற்பாடு
|
சேலைகள், துப்பட்டாக்கள், திரைசீலைகள், குஷன் கவர்கள், மேஜை விரிப்புகள் ஆகியவற்றை அஞ்சலி விற்பனை செய்கின்றார். இணையதளம் மற்றும் சமூக வலைதள பக்கங்கள் மற்றும் வாட்ஸ் ஆப் வாயிலாக அவருடைய தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. கோட்டா டோரியா என்பது ஒரு காற்றோட்டமுள்ள துணியாகும், இது மென்மையானதாக குறைந்த எடை கொண்டதாக இருக்கிறது. இது கோடைகாலத்துக்கு அணிய ஏற்றதாகும். ராஜஸ்தானின் பாலவனப்பகுதியை பூர்விகமாக கொண்டதாகும். “இந்த துணி பருத்தியிலும், பட்டு வகையிலும் கிடைக்கிறது.” என்றார் அஞ்சலி. இவர் முதலில் முகநூல் வழியாக தமது தயாரிப்புகளை விற்கதொடங்கினார். பின்னர் அவருக்கு வெளிநாடுகளில் இருந்து வணிக விசாரணைகள் வரத் தொடங்கின. “அமெரிக்காவில் இருந்து அதிகாலை 3 மணி அல்லது 4 மணிக்கெல்லாம் வணிக விசாரணை அழைப்பை பெறுவேன். அவற்றுக்கெல்லாம் உடனடியாக பதிலளிப்பேன். ஆரம்ப காலகட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என உந்துதலுடன் செயல்பட்டேன்,” என்று தொழில் முனைவு பயணத்தின் ஆரம்பகாலகட்ட நாட்கள் பற்றி நினைவு கூர்ந்தார். தம்மிடம் சால்வார் சூட்கள் 70 சதவிகிதம் அளவுக்கு விற்பனையாகவதாகவும், சேலைகள் 20 சதவிகிதம் விற்பதாகவும், 5 சதவிகிதம் அளவுக்கு துப்பட்டா மற்றும் வீட்டு அலங்கார துணிகள் விற்பனை ஆவதாகவும் கூறினார். இந்த பொருட்களில் சாதாரண கோட்டா டோரியா துணியானது ரூ.299 முதல் ரூ.3,999 வரை விலை கொண்டதாக உள்ளது. தூய ஜரிகை கோட்டா கைத்தறி சேலைகள் ரூ.4999 இல் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் வரை இருக்கிறது.

நண்பர்கள் மற்றும் உடன் பணியாற்றுவோர்
அஞ்சலியின் கோட்டா துணி ஆடைகள் குறித்த பாராட்டுகளை குவிக்கின்றனர்
|
இன்றைக்கு அஞ்சலி, 1,500 விற்பனையாளர்களை கொண்ட கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறார். விற்பனையாளர்களில் பெரும்பாலானவர்கள் தென்இந்தியாவில் பரந்து விரிந்திருக்கின்றனர். “ பலர் குடும்பத்தலைவிகள், தவிர சில பணிக்கு செல்லும் பெண்களும் இடம்பெற்றுள்ளனர். தவிர பொட்டிக் மற்றும் கடை உரிமையாளர்களும் உள்ளனர்,” என்றார் அஞ்சலி அவர் குறைவான மூலதனம் கொண்ட வணிக முறையில் செயல்படுகிறார். குருகிராமில் உள்ள வீடுடன் கூடிய அலுவலகத்தில் வெறும் 9 ஊழியர்களைக் கொண்டு செயல்படுகிறார். அதில் 8 பேர் பெண்கள். மொத்த வியாபாரம் மற்றும் ஏற்றுமதிக்கான சரக்குகளை அனுப்புவதற்கு கோட்டாவில் அவருக்கு ஒரு கிடங்கு உள்ளது அதனை அவர் மாமனார் சுபாஷ் அகர்வால் நிர்வகிக்கிறார். அவருடைய ஆதரவால்தான் இந்த வெற்றியை தன்னால் பெற முடிந்தது என்கிறார் அஞ்சலி. அவருடைய வணிகத்தில் 15 சதவிகிதம் ஏற்றுமதியால் நடக்கிறது. கேடிஎஸ் நிறுவனத்துக்கு இந்தியா முழுவதும், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, துபாய் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பரந்து விரிந்த அளவில் 5 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். கைத்தறி துணிகள், விசைத்தறி துணிகள் என இரண்டு வணிகத்தையும் அஞ்சலி கையாள்கிறார். உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள நெசவாளர்களுடனும் அவர் பணியாற்றுகிறார். உத்தரபிரதேசத்தில்30 தறிகளுடன் அவர் ஒப்பந்தம் செய்திருக்கிறார். துணிகளுக்கான வடிவமைப்புகளை மேற்கொள்வோர் இந்தியா முழுவதும் உள்ளனர். “பெருநிறுவன வேலையில் இருந்து விலகி, தொழில்தொடங்க முனைந்தபோது, கோட்டாவில் கடுமையான நெருக்கடியில் இருந்த நெசவாளர்களிடம் நேரடியாகச் சென்றேன். கேடிஎஸ் நிறுவனத்துக்காக கோடா டோரியா துணிகளை நெய்வதற்கான பணிகளில் அவர்களை ஈடுபடுத்தினேன். அவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி தனிச்சிறப்பு வாய்ந்த வடிவமைப்புகளை வெளிக்கொணர்ந்தேன்,” என்றார் அஞ்சலி.

குருகிராமில் உள்ள வீட்டுடன் இணைந்த அலுவலகத்தில் 9 ஊழியர்களுடன் அஞ்சலி பணியாற்றுகிறார். |
“மதுபாணி கிரியேசனுக்காக என்னுடைய துணிகள் பீகார் கொண்டு செல்லப்படுகின்றன. மற்றும் உ.பி., நொய்டா, சூரத், மும்பை மற்றும் ஆந்திராவில் டிஜிட்டல் அச்சு மேற்கொள்ளப்படுகிறது.” ஜவுளித்தொழில் பற்றிய அறிவை இப்போது அஞ்சலி வென்றெடுத்திருக்கிறார். பருத்தி மற்றும் பட்டு இரண்டும் கலந்து 10 முதல் 90 சதவிகிதம் வரை இருக்கும் வகையில் துணிகளை உருவாக்க நெசவாளர்களுடன் அவர் நெருங்கி பணியாற்ற ஆரம்பித்தார். அஞ்சலி சுயமாக கற்றுக் கொண்ட ஓவியராவார். அழகான வடிவமைப்புகளை உருவாக்குவதற்கு இதுவே உதவுகிறது. “என்னுடைய கல்லூரி நாட்களிலும் பணியிடங்களிலும் எனது உடைகளுக்கு நான் பாராட்டுகளைப் பெறுவேன். உடைகளை வாங்கித் தருமாறு பலர் என்னிடம் கேட்டிருக்கின்றனர்.அந்த என்னுடைய உடை அணியும் உணர்வுதான் தொழில் தொடங்கவும், பாரம்பர்ய மிக்க கோட்டோ டோரியா துணியை நோக்கித் தள்ளும் என்று நான் ஒருபோதும் உணரவில்லை, “ என்று பகிர்ந்து கொள்கிறார் அஞ்சலி. ஆரம்பத்தில் டெல்லி மற்றும் குருகிராமில் தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு மற்றும் நண்பர்களுக்கு கோட்டா துணிகளை வாங்கித்தரும் நபராக இருந்தார். இதுவே கேடிஎஸ் நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்ற அஞ்சலியின் எண்ணத்தின் தொடக்கப்புள்ளியாக இருந்தது. “கோட்டா டோரியா துணி ராஜஸ்தான் மாநிலத்துக்குள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக உணர்ந்தேன். மெல்லிய அழகான இந்த துணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற பயணத்தை நான் தொடங்க முடிவுசெய்தபோது, இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் உலகம் முழுவதும் கிடைக்க செய்ய வேண்டும் என்றும் நினைத்தேன்,” என்றார் அவர். கோட்டாவில் உள்ள பொறியியல் பல்கலைக்கழக கல்லூரியில் இருந்து எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற அஞ்சலி, ராஜஸ்தானின் ஜோத்பூரில் பிறந்து வளர்ந்தவராவார். பொறியியல் பட்டம் முடித்த உடன், 2003ஆம் ஆண்டு ஜூலையில் மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் உள்ள எம்கோ லிமிடெட் நிறுவனத்தில் பயிற்சி எலெக்ட்ரிக்கல் வடிவமைப்பு பொறியாளராக பணியில் சேர்ந்தார்.

கோட்டா துணி ஒரு வண்ணமயமான பரவல் |

சென்னையில் விரைவில் முதலாவது கேடிஎஸ் கடையை திறப்பது என அஞ்சலி திட்டமிட்டுள்ளார் |
“துணிகளை உலர் சலவை செய்வது என்பது அதிக செலவு பிடிக்கும். நடுத்தர குடும்பத்துப் பெண்களால் அது இயலாது. எனவே, நான் துணியை வலுவானதாக உருவாக்குவதற்காக பணியாற்றினேன்,” என்று அவர் சொல்கிறார். தூய்மையான பட்டு இழையை உபயோகித்து உருவாக்கும் தங்க ஜரிகை சேலைகளுக்காக கோடா பொதுவாக புகழ்பெற்று விளங்கியது என்று அஞ்சலி சொல்கிறார். இதை செய்து முடிக்க ஒன்று முதல் மூன்று மாதம் ஆகுமாம். அஞ்சலி, ஆண்களுக்கான ஆடைகள் போன்ற புதிய கோடா துணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்கு வீட்டு அலங்காரங்களுக்கான துணிகள் ஏற்றுமதி செய்யவும், இந்த ஆண்டு சென்னையில் கடை திறக்கவும் யோசித்துவருகிறார். அஞ்சலி தினமும் காலை 4 மணிக்கு எழுகிறார். வடிவமைப்புகளை உருவாக்கி, பின்னர் அதனை அவருடைய நெசவாளர்களுக்கு அனுப்பி வைக்கிறார். இதைத்தான் முதலாவதாக காலையில் அவர் மேற்கொள்கிறார். குருகிராமில் உள்ள ஒரு அழகிய வீட்டில் அவருடைய கணவர் சுந்தீப் அகர்வாலுடன் அவர் வசிக்கிறார். அவர்களுக்கு 11 வயதான அபுதயா என்ற மகன் இருக்கிறார்.
அதிகம் படித்தவை
-
மளிகையில் மலர்ச்சி!
தந்தையின் மளிகைக்கடையை புதுப்பித்து விற்பனையை அதிகப்படுத்தினார் வைபவ் என்ற இளைஞர். இதே போல் பிற மளிகைக் கடைகளையும் நவீனப்படுத்தும் தொழிலைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளிலேயே ஒரு கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டி உள்ளார் இவர். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.
-
சேலையில் வீடு கட்டுபவர்!
ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பர்யமிக்க துணி வகையை சர்வதேச சந்தை வரை எடுத்துச்சென்று பெருமிதம் சேர்த்ததுடன், தமது வணிகத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார் அஞ்சலி அகர்வால். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவர் பொறியியல் பட்டம் முடித்த பின்னர் ஒரு சில இடங்களில் வேலை பார்த்தபின், சொந்த நிறுவனத்தைத் தொடங்கி நடத்துகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
மாற்று யோசனை தந்த வெற்றி
ஐஐடி மாணவர் ரகு, அமெரிக்கா செல்லும் திட்டத்தை கைவிட்டு, 20 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் வாகனங்களில் விளம்பரம் செய்யும் மாற்று யோசனையில் ஒரு நிறுவனம் தொடங்கினார். இன்றைக்கு அவரது நிறுவனம் ஆண்டுக்கு 32 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. டெல்லியில் இருந்து பார்தோ பர்மான் எழுதும் கட்டுரை
-
நாற்பதிலும் வெல்லலாம்!
பெரும்பாலானோர் ஓய்வுபெறுவதைத் திட்டமிடும் வயதில்அதாவது 40 வயதைத் தாண்டிய நிலையில் கொல்கத்தாவைச்சேர்ந்த மூன்று பேர் தங்கள் பிஎப், கிராஜுட்டி பணத்தைப் போட்டுதொழில் தொடங்கினார்கள். ஆறு ஆண்டுக்குப் பின்னால் என்ன ஆனது? ஜி.சிங் எழுதும் கட்டுரை
-
குப்பையிலிருந்து கோடிகள்
அமெரிக்காவில் தூக்கி எறியப்படும் படுக்கை விரிப்புகளை ஜெய்தீப் சஜ்தே வாங்குவார். இந்தியாவில் உள்ள தொழிற்கூடத்தில் அவற்றை வண்ணமிகு பைகளாக மாற்றுவார். கடந்த ஆண்டு அவர் இத்தொழிலில் பெற்றது 4 கோடி ரூபாய்கள். பி சி வினோஜ்குமார் எழுதும் கட்டுரை
-
விருத்தாசலம் டூ வர்ஜீனியா!
தமிழ்நாட்டில் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் சரவணன் நாகராஜ். 12ஆம் வகுப்பில் கூட தேர்ச்சி பெறாத நிலை. தந்தையின் தொழிலோ நொடித்துப்போனது. இந்நிலையில் வேலை தேடி சென்னை வந்தவர் பின்னர் அமெரிக்கா சென்று அங்கு ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக கட்டமைத்து வளர்த்தெடுத்துள்ளார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.