அன்று வீடுவீடாய்ச் சென்று பொருட்கள் விற்ற பெண், இன்று 487 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவன அதிபர்!
02-Jan-2026
By சோபியா டேனிஷ்கான்
புதுடெல்லி
கூச்சசுபாவம் கொண்ட பதின்வயது பெண்ணாக இருந்தவர் பாவனா ஜுனேஜா. டெல்லியைச் சேர்ந்த இவர் தாயின் தூண்டுதலால் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த அழகுசாதனக் கடையின் பொருட்களை வீடு வீடாக சென்று விற்க ஆரம்பித்தார்.
அந்த நிலையில் இருந்து தொடங்கி, இருபது ஆண்டுகளுக்குள் 65 மில்லியன் அமெரிக்க டாலர்(சராசரியாக இந்திய ரூபாயில் ரூ.487.5 கோடி) ஆண்டு வருவாய் தரும் வணிக சாம்ராஜ்யத்தை கட்டமைத்திருக்கிறார்.
பாவனா(45) தமது முதல் நிறுவனத்தை 17 வயதில் தொடங்கினார். அமெரிக்க
நிறுவனமான எஸ்.எஸ். டுவெக் & சன்ஸ் என்ற நிறுவனத்தின் கொள்முதல் முகவராக மாறினார்.
21வது வயதில் திருமணம் முடிந்தபின்னர் அமெரிக்கா சென்றார். அங்கே ஒரு தகவல்
தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் வரவேற்பாளராக பணியில் சேர்ந்தார். குறுகிய
காலத்துக்குள் மில்லியன் டாலர் மதிப்புள்ள விற்பனைகளை வாடிக்கையாளர்களிடம்
மேற்கொண்டு தமது புத்திசாலித்தனத்தை
நிரூபித்தார். அந்த நிறுவனமே அவர் கைக்கு வந்தது.
|
17 வயதில் பாவனா ஜூனேஜா தமது
நிறுவனத்தை தொடங்கினார். தொடர்ச்சியாக தொழில்கள் தொடங்கும் தொழில் முனைவோராக
மாறினார். (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)
|
இப்போது அவர், இன்ஃபினிட்டி எனும் மருந்து மற்றும் லைஃப் சயின்ஸ் நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார். தொடந்து வானாடார் என்ற ஏஐ அடிப்படையிலான ஆர்பிஓ(பணியாளர் நியமன செயல்பாடுகள்) நிறுவனம் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். ஜம்மு என்ற பெயரில் ஃபேஷன் சில்லறை வணிக கடை மற்றும் எம்பவர்ட்டு என்ற சொத்துகள் நிர்வகிக்கும் நிறுவனம் ஆகியவற்றையும் நடத்திவருகிறார். தொழில்முனைவு என்பது அவரது மரபணுவிலேயே ஊறியிருந்திருக்கவேண்டும். ஆனால், சந்தைப்படுத்துல் தொடர்பாக அவரது தாய் அவருக்கு பயிற்சி அளித்தார். அவருடைய கனவுகளை துரத்துவதற்கான நம்பிக்கையை அவரது தாய் அவருக்குள் ஊட்டியிருக்கிறார். “என் தந்தை லண்டனில் கேட்டரிங் வணிகத்தில் ஈடுபட்டு வந்தார். அவர் அங்கே சமோசாவை அறிமுகம் செய்ததால், அவர் சமோசா கிங் என்று அறியப்பட்டார்,” என்று நினைவு கூர்கிறார் பாவனா. பாவனா 13 வயது சிறுமியாக இருந்தபோது, அவரது பெற்றோர் பிரிந்து விட்டனர். மூன்று குழந்தைகளில் இரண்டாவதாகப் பிறந்த அவரை இது பெரும் அளவுக்குப் பாதித்தது. இதனால்,அவர் அமைதியானவராக, தனித்து இருப்பவராக மாறினார். “ஆனால், என் தாய் என்னைத் தூண்டினார். நான் வெளி உலகத்தில் மக்களை சந்திக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியோடு இருந்தார்.” “அலங்காரப் பொருட்கள் மற்றும் இதர இது போன்ற பொருட்கள் விற்பனை செய்யும் அழகுசாதனப்பொருட்கள் கடையை என் தாய் வைத்திருந்தார். புதுடெல்லியில் நாங்கள் வசித்து வந்த டிபன்ஸ் காலனியில் வீடு வீடாகச் சென்று கடையின் பொருட்களை விற்பதற்காக என் தாய் என்னை வெளியே அனுப்பினார். மக்கள் வேண்டாம் என்று சொன்னால், எப்படி அவர்களை இன்னும் நன்றாக கையாளுவது என அவர் எனக்கு கற்றுக்கொடுத்தார். ஒரு பொருளை வாங்க மறுத்த வாடிக்கையாளர் வீட்டுக்கு வேறு ஒரு பொருளுடன் மீண்டும் அனுப்பினார். இதன்வாயிலாக இறுதியில் மறுப்புத் தெரிவித்தவர்களிடம் வேறு பொருட்களை விற்றுவிடுவேன்.” பாவனாவுக்கு இது வாழ்நாள் பாடமாக அமைந்தது. விரைவிலேயே அவர் மக்களை அணுகுவதில் உள்ள தமது கூச்சசுபாவத்துக்கு விடை கொடுத்தார், இதன் வாயிலாக 17 வது வயதிலேயே சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கும் அளவுக்கு முன்னேறினார். மேட்டர் டீ பள்ளியில் மேல்நிலைக் கல்வி படித்தார். செலவை குறைக்கும் வகையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் தொலை தூரக் கல்வி வழியில் பிஏ(1994-97) பட்டம் பெற்றார்.

|
சந்தீப் சிங் உடன் பாவனா.
சந்தீப் சிங் எம்பவர்டு நிறுவனத்தின் துணை நிறுவனராகவும் அவரது வணிக
பங்குதாரராகவும் இருக்கிறார்.
|
1995 ஆம் ஆண்டு வீட்டு வசதி சாமான்களை கையாளும் ஸ்பெக்ட்ரா ஷேட்ஸ் இன்டர்நேஷனல் என்ற வர்த்தக நிறுவனத்தை தொடங்கினார். இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பில் இருந்து வெளிநாட்டு வணிகர்களின் பட்டியலை அவர் பெற்றார். எஸ்.எஸ். ட்வெக்ஸ் & சன்ஸ் என்ற நியூயார்க்கை சேர்ந்த நிறுவனத்துடன் பேசி அவர்களுடன் ஒப்பந்தம் செய்தார். அந்த நிறுனத்தின் ஒரு பிரதிநிதி இந்தியா வந்தபோது அவரை சந்தித்தார். இந்தியாவுக்கான கொள்முதல் முகவராக பாவனாவை அவர் நியமித்தார். தவிர, கொள்முதல் பணிகளை மேற்கொள்வதற்காக 3000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள காசோலையை கமிஷன் முன்தொகையாகக் கொடுத்தார். “அந்த நிறுவனத்தின் முகவர் என்ற வகையில், அடுத்த நான்கு ஆண்டுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்தேன். இந்த வழியில் என் வாழ்க்கை பயணித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது,” என்றார் பாவனா. 21வது வயதில் விஷால் குரானா என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார். தம்பதி இருவரும் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். “என் தாய் கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்றவர். இது போன்ற குடும்பத்துக்கு இந்திய சமூகத்தில் என்ன சிக்கல்கள் என்பது என் அம்மாவுக்குத் தெரியும். எனவே, நான் முன்கூட்டியே திருமணம் செய்து கொள்ள சம்மதித்தேன்.” என்று விவரிக்கிறார். அமெரிக்காவில், தகவல் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் வரவேற்பாளராகப் பணியாறினார். “எனது விருப்பம் எல்லாம் விற்பனையில் இருந்ததால், அவர்களிடம், விற்பனை முயற்சியில் ஈடுபடுவதற்கு ஒப்புதல் கேட்டேன். கேட்டர் பில்லர் நிறுவனத்தில் என்னுடைய முதல் ஆர்டரைப் பெற்றேன்,” என்றார் அவர். “ஒரு ஆண்டுக்குள் நிறுவனத்தின் வருவாயை பூஜ்யத்தில் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தினேன்.” பிறகு அந்த நிறுவனம் அவர் கைக்கு வந்தது. பின்னர் அதனை விற்று விட்டார். 2004 ஆம் ஆண்டு அவரது கணவர் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தார். ஆனால், தமது மகள், மகனுடன் அமெரிக்காவிலேயே பாவனா வசித்து வந்தார். இடையில் அவருடைய வாழ்க்கையில் தூண்போல இருந்து ஆதரவு அளித்து வந்த அவரது தாய் கேன்சர் காரணமாக உயிரிழந்தது அவருக்கு பெரும் வலியை ஏற்படுத்தியது. 2009 ஆம் ஆண்டு பாவனா கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். ஆனால், எந்த ஒரு பின்னடைவும் அவரது வளர்ச்சியைத் தடுக்கவில்லை. 2013ஆம் ஆண்டு இன்ஃபினிட்டி என்ற மருந்து மற்றும் லைஃப் சயின்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம் சர்வதேச அளவிலான பயோடெக், மருந்து நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வந்தது. இந்நிறுவனம் இங்கிலாந்து, கனடா, இந்தியா ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. தமது சொந்தப் பணத்தில் இருந்து இந்த நிறுவனத்தை அவர் தொடங்கினார். பின்னர் அமெரிக்காவை சேர்ந்த ஷெல்லி நிச்சானி என்பவர் அதில் முதலீடு செய்தார். இன்ஃபினிட்டி நிறுவனத்தில் இப்போது 700 –க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். ஆண்டு விற்பனையின் வருவாய் கணக்குப்படி 35 மில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது.
| பாவனா தமது மகன், மகளுடன் |
2018ஆம் ஆண்டு அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட வேனேட்டர் என்ற ஏஐ அடிப்படையிலான ஆர்பிஓ நிறுவனத்தை பாவனா தொடங்கினார். நொய்டாவில் ஜம்மு என்ற பெயரில் ஒரு ஃபேஷன் சில்லறை விற்பனை கடையையும் தொடங்கினார். 2019ஆம் ஆண்டு பாவனா, சந்தீப் சிங்கை சந்தித்தார். அப்போது அவர் கோஒர்க் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக இருந்தார். இருவரும் இணைந்து எம்பவர்டு என்ற சொத்து நிர்வகிக்கும் நிறுவனத்தைத் கடந்த ஜூன் மாதம் தொடங்கினர். ஐஓடி-யில் இயங்கும் அலுவலகங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்காக இந்த நிறுவனம் உருவாக்கியது. பணியிடத்தின் பயன்பாட்டை மேற்படுத்த தொழில்நுட்பத்தையும் இவர்கள் உருவாக்கினர். “நாங்கள் குர்கான், நொய்டா, ஐதராபாத் ஆகிய இடங்கள்ல் 3 லட்சம் ச.அடி திட்டங்களைப் பெற்று பணிபுரிகிறோம். ஆகவே இந்த ஆண்டு மிகவும் அருமையாக இருக்கிறது,” என்கிறார் பாவனா. “எதிர்காலத்தில் நான் என்னுடைய வேர்களுக்குச் செல்ல விரும்புகின்றேன். வேலை தளத்தில் அதிக பெண்களை கொண்டு வருவதற்கு முக்கியத் தேவையான கல்வியை வழங்குவேன் மற்றும் பெண்களுக்கான பள்ளிகளை கட்டமைப்பேன்,” என்கிறார் அவர்.
அதிகம் படித்தவை
-
சுவை தரும் வெற்றி
கொல்கத்தாவைச் சேர்ந்த கல்லூரி நண்பர்களான வினோத்துக்கும் சாகருக்கும் மொமோ என்கிற உணவுப் பண்டத்தை சாப்பிடப் பிடிக்கும். இருவரும் சேர்ந்து மோமொ விற்பதையே தொழிலாக்கினார்கள். இன்று 100 கோடி மதிப்பில் அத்தொழில் வளர்ந்துள்ளது. ஜி சிங் எழுதும் கட்டுரை
-
டீல்..மச்சி டீல்!
பழைய செல்போன்களை வாங்கிப் பழுது நீக்கி விற்கும் தொழிலில் பட்டையைக் கிளப்புகிறார் யுவராஜ் அமன் சிங். டெல்லியில் சாலையோர மேசையில் போன்களைப் போட்டு விற்றவர் இன்று 150 கோடி ரூபாய்க்கு விற்பனையை எட்டிய வெற்றிக்கதையை விளக்குகிறார் நரேந்திரா கௌசிக்
-
பணம் கறக்கும் தொழில்!
நல்ல சம்பளத்தில் கார்ப்பரேட் நிறுவனத்தில் கனவு வேலையைப் பார்த்துக்கொண்டிருந்த நான்கு நண்பர்கள் திடீரென வேலையை விட்டு சொந்தமாகத் தொழில்தொடங்கினர். அது ஒரு மாட்டுப்பண்ணை. இன்று 100 கோடி வருவாய் தரும் பிராண்ட். ஜி சிங் எழுதும் கட்டுரை
-
வெற்றிக்கலைஞன்
பள்ளியில் பைலட் பேனா வைத்திருக்கத் தகுதி இல்லை என்று சொல்லப்பட்ட ஒரு சிறுவன் வளர்ந்து இன்று 127 கார்கள் வைத்திருக்கிறார். கடும் உழைப்பால் இந்நிலையை எட்டி இருக்கும் முடி திருத்தும் கலைஞரான வி. ரமேஷ் பாபுவின் வெற்றிக்கதை. கட்டுரை: பி சி வினோஜ் குமார்
-
விரக்தியை வென்ற மனோசக்தி!
மருத்துவப் பட்டமேற்படிப்பு முடித்து விட்டு அரசு வேலைக்காக காத்திருந்தார் டாக்டர் தாபாலி. வேலை கிடைக்காத விரக்தி மனநிலையை வென்றெடுத்து மணிப்பூர் மாநிலத்தின் முதல் மருத்துவ ஆய்வகத்தைதொடங்கி வெற்றிபெற்றார். ரீனா நாங்க்மைத்தம் எழுதும் கட்டுரை.
-
வென்றது கல்லூரிக் கனவு!
கார்த்திக் ஒரு பிரபலமான ஹோட்டல் குழுமத்தின் வணிக வாரிசு. அவருக்கு தாமே ஏதாவது சொந்தமாக செய்ய வேண்டும் என்ற உந்துதல். எனவே கல்லூரி படிக்கும்போதே பயண ஏற்பாட்டாளராக தொழில் செய்தார். படிப்பு முடிந்த உடன் தொழிலில் முழுமையாக மூழ்கி வெற்றி பெற்றார். சோஃபியா டானிஸ்கான் எழுதும் கட்டுரை.
