கோடைகாலத்தில் நமக்கு தேவையானது! காற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கும் கருவி! சமூக அக்கறையுடன் வெற்றி பெற்ற இளைஞர்!
05-Feb-2023
By தேவன் லாட்
மும்பை
குழாயில் காத்துதாங்க வருது.. என்று இனி யாரும் சொல்லவேண்டியதில்லை. அந்த காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் தொழில்நுட்பத்துடன் வந்திருக்கிறார், மும்பையைச் சேர்ந்த 39 வயது தொழில் அதிபர் சித்தார்த் ஷா. எல்லோரும் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டிருக்கும் நிலையில் தாகத்தை தணிக்கும் நோக்கத்துடன், இதை இந்தியாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து இந்த தொழில்நுட்பத்தைக் கையகப்படுத்தினார் இவர். “அந்த நேரத்தில் யாருமே இந்த தொழில்நுட்பத்தைப் பற்றிக் கேள்விப்படவில்லை. இதற்கான இந்திய உரிமையை நான் வாங்கியபோது, இதை நான் ஒரு தொழில் வாய்ப்பாகப் பார்க்கவில்லை. எதிர்காலத்துக்கான தேவையாகவே கருதினேன்,” என்கிறார் ஷா.
|
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து காற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை சித்தார்த் (கோட் அணிந்திருப்பவர்) பெற்றார். இரண்டாண்டுகளுக்கு முன்பு இந்த கருவிகள் உற்பத்தியைத் தொடங்கினார்.(புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)
|
ஏர் ஓ வாட்டர்( Air-O-Water) போன்ற மிஷின்களின் விலை சர்வதேச சந்தையில் பல லட்சம் ரூபாய்களாக இருக்கின்றன. ஆனால், ஷா, இதனை மிகக் குறைவாக அதாவது 25 லிட்டர் மாடல் 65,000 ரூபாய்க்கு விற்கிறார். பத்து ஆண்டுகளுக்கு முன்பே அவர் இந்த தொழில்நுட்பத்தைக் கையகப்படுத்தியதால் இது சாத்தியமானது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் மெஷின்களை உள்நாட்டில் உருவாக்கத் தொடங்கினார்.
100 லிட்டர், 500 லிட்டர் மற்றும் 1000 லிட்டர் திறன் கொண்ட தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் பெரிய மிஷின்கள் முறையே ரூ.2 லட்சம், ரூ.5 லட்சம் மற்றும் ரூ.7 லட்சம் என்று விற்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் 100-250 இயந்திரங்கள் விற்பனை ஆகின்றன. நிறுவனத்தின் பணப்பெட்டி ஏற்கனவே நிரம்பி இருக்கிறது.
இயற்கையைப் போலவே ஏர் ஓ வாட்டர் பணிபுரிகிறது என்கிறார் ஷா, இந்த கருவியின் தொழில்நுட்பம் காற்றில் உள்ள ஈரப்பதத்தில் இருந்து தண்ணீரை உருவாக்கும்விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான மக்களைச் சென்றடையும் வகையில், இந்த கருவி குறைந்த விலையில் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். “ஏர் ஓ வாட்டர் மிஷின் ஒரு வசதி படைத்தவர்களுக்கான மிஷின் என்று நான் முன்னெடுக்கவிரும்பவில்லை. என்னுடைய மிஷின் முதலில் ஏழைகளைச் சென்றடைய வேண்டும். அவர்கள்தான் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் முதலாவதாக இருக்கின்றனர். (குடிநீர் பற்றாக்குறையின்போது),” என்கிறார் சாய்சன்ஸ் டிரேட் அன்ட் இன்டஸ்ட்ரி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஷா.
“இந்த தொழில் திட்டத்தை வங்கி மற்றும் முதலீட்டாளர்களிடம் காட்டியபோது, இதனை மேஜிக் என்று அவர்கள் சொன்னார்கள்,” என்று நினைவுகூர்கிறார். ஒரு மிஷின் மூலம் காற்றில் இருந்து குடிநீரை உருவாகுவது போன்ற செயலை இதற்கு முன்பு அவர்கள் பார்த்ததில்லை. ”எங்கள் மிஷினைப் பார்க்கும் பொதுமக்கள் இன்றும் கூட வியப்புத் தெரிவிக்கின்றனர்.”
“குடிநீர் பற்றாக்குறை வரும் என்று எனக்குத் தெரியும்.ஆனால், இவ்வளவு விரைவில் வரும் என்று ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. நாங்கள் தயாராக இருக்கின்றோம். மாதம்தோறும் பல்வேறு வகையான மிஷின்களை தயாரிக்கத் தொடங்கினோம். மக்கள் அவற்றில் இருந்து தேர்ந்தெடுக்கும் வகையில் இருக்க வேண்டும்,” என்கிறார் ஷா. இந்த தொழில் நுட்பத்தைக் கையகப்படுத்துவதற்காக ஷா 15 கோடி ரூபாய் முதலீடு செய்தார்.
|
வளிமண்டலத்தில் ஈரப்பதம் அதிகம் இருக்கக்கூடிய மும்பை, சென்னை போன்ற கடலோர நகரங்களுக்கு இந்த மிஷின் ஏற்றதாக இருக்கும் என்று சித்தார்த் சொல்கிறார்.
|
இன்றைக்கு இந்த நிறுவனம், மாதம் ஒன்றுக்கு 1000 ஏர் ஓ வாட்டர் மிஷின்களை உற்பத்தி செய்கிறது. மும்பை அருகில் உள்ள பிவாண்டியில் உள்ள 45,000 ச.அடி இடத்தில் அதன் தொழிற்சாலை அமைந்துள்ளது.
2017-ம் ஆண்டு முதன் முதலில் நடந்த விற்பனை குறித்து ஒரு சுவையான சம்பவத்தை நினைவு கூறுகிறார். “மும்பையில் வசிக்கும் என் சகோதரிக்கு முதல் ஏர் ஓ வாட்டர் மிஷினை அனுப்பி வைத்தேன். என் சகோதரி அதனை இரண்டு ஆண்டுகளாகப் பயன்படுத்தவில்லை. அவர் வசிக்கும் குடியிருப்பில் இருப்பவர்கள் கடுமையான குடிநீர் பஞ்சத்தை சந்தித்தனர். அப்போது அவர், இந்த மிஷினை உபயோகிக்கத் தொடங்கினார். அப்போதுதான் அந்த மிஷினின் மதிப்பை அவர் உணர்ந்தார்,” என்கிறார் ஷா.
ஷா இப்போது, தமது மிஷின் குறித்து, தொழில்நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு சொசைட்டிகளில் செயல்விளக்கம் செய்து காண்பித்து வர்த்தகத்தை முன்னெடுக்கிறார். இதனால் அவருக்கு சாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன. மிஷினை நிறுவியதில் இருந்து ஒரு ஆண்டுக்கு இலவச சர்வீஸ் வழங்கப்படுகிறது.
சாய்சன்ஸ் என்ற அவரது குடும்ப நிறுவனம் தொலைக்காட்சி பெட்டிகள்,ரேடியோக்கள், தந்தி மற்றும் தொலைபேசிக்கான உபகரணங்களை உற்பத்தி செய்து வந்தது. அந்நிலையில்தான் ஏர் ஓ வாட்டர் தொழில்நுட்ப உரிமைக்கான இந்திய காப்புரிமையை வாங்கி வளிமண்டலத்தில் இருந்து குடிநீர் உற்பத்தி செய்யும் தொழிலை தொடங்கி உள்ளனர்.
இப்போதும் சாய்சன்ஸ் நிறுவனம், மின்னணு பொருட்கள், துல்லிய உலோக கட்டுமானம், தளங்களை செய்யும் பணிக்கு உதவும் பொருட்கள், மரசாமான்கள், சோலார் வீட்டு உபயோகப்பொருட்கள், பவர் பேனல்கள், எல்இடி லைட்கள் மற்றும் இதர தொலைதொடர்பு பொருட்கள் ஆகியவற்றை தயாரிக்கிறது.
|
மும்பை அருகில் உள்ள பிவாண்டியில் இருக்கும் சாய்சன்ஸ் தொழிற்சாலையில் ஏர் ஓ வாட்டர் மிஷின்கள் தயாரிக்கப்படுகின்றன.
|
கிராமப்பகுதிகளில் இந்த மிஷினை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று ஷா விரும்புகிறார். “எல்லாவற்றையும் பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்ற மனப்பான்மை, பிரச்னை வரும் வரை நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில்லை. அனைத்து தண்ணீரும் தீரும் வரை கூட, இந்தப் பிரச்னை எவ்வளவு பெரிய பிரச்னை என்பதை நாம் உணரமாட்டோம், “ என்று வருத்தப்படும் ஷா, தொடர்ந்து கூறுகையில், “தண்ணீரை சேமிப்பது பெரிய முறையாகும். ஏரிகள் போன்ற இயற்கை வளங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. எனவே, மிகவும் அக்கறையோடு கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.
“இந்தியாவில் தண்ணீர் இல்லாமல் போய்விடும் என்று ஏர் ஓ வாட்டர் எதிர்பார்க்கவில்லை. எங்களால் முடிந்த சிறந்ததை செய்கிறோம். மேலும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை வரும்பட்சத்தில், ஏர் ஓ வாட்டர் போன்ற மிஷின்கள் உபயோகமாக இருக்கும். வீட்டில் குளிர்சாதனப்பெட்டி எப்படி இருக்கிறதோ, தண்ணீரை உற்பத்தி செய்யும் கருவியும் நமக்கு வேண்டும், “ என்கிறார் ஷா.
மும்பை, சென்னை, கொச்சி போன்ற காற்று ஈரப்பதம் அதிகமாக இருக்கும் கடற்கரை பகுதிகளை ஷா நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது. தவிர, இமாசலப் பிரதேசத்தின் மலைப்பகுதிகளையும் எதிர்கால சந்தை வாய்ப்பாக கருதுகின்றனர்.
அதிகம் படித்தவை
-
அழகான வெற்றி
கிராமத்தில் சாணி வறட்டி தட்டியதில் இருந்து முடிதிருத்தும் வேலை வரை கௌரவ் ராணா செய்யாத தொழில் இல்லை. டிப்ளமோ படிப்பு முடித்து, இப்போது 11 கோடி வர்த்தகம் செய்யும் அழகுச்சேவை நிறுவனம் நடத்தும் 24 வயது இளைஞரின் வெற்றிக்கதை இது. பிலால் ஹாண்டூ கட்டுரை
-
மாவில் கொட்டும் கோடிகள்
தினக்கூலி ஒருவரின் மகன் பிசி முஸ்தபா. மின்சாரமும் சாலைகளும் அற்ற கேரள குக்கிராமத்தில் அன்றாடம் செலவுக்கே சிரமப்பட்டு ஏழ்மையில் வளர்ந்த இவர் இன்று தன் உழைப்பால் வளர்ந்து 100 கோடி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்துகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
மளிகையில் மலர்ச்சி!
தந்தையின் மளிகைக்கடையை புதுப்பித்து விற்பனையை அதிகப்படுத்தினார் வைபவ் என்ற இளைஞர். இதே போல் பிற மளிகைக் கடைகளையும் நவீனப்படுத்தும் தொழிலைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளிலேயே ஒரு கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டி உள்ளார் இவர். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.
-
வேர் ஈஸ் த பார்ட்டி?
வசதியான குடும்பத்தில் பிறந்தபோதும், தனியாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம்கொண்டவர் சயான் சக்கரவர்த்தி. அவர் வேர்இஸ் த ஃபுட் என்ற வித்தியாசமான பெயர் கொண்ட சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்ட்களை நடத்தி வருகிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை
-
சர்க்கரை இல்லாமல் இனிக்கிறதே!
தள்ளுவண்டியில் ஜூஸ் கடை வைத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கின்றனர் கொல்கத்தாவின் இரண்டு இளைஞர்கள். சர்க்கரை சேர்க்காமல் அவர்கள் தயாரிக்கும் ஜூஸ் விற்பனையில் ஒரு கோடி ரூபாய் ஆண்டு வருவாய் இலக்குடன் அவர்கள் நடைபோடுகின்றனர். ஜி.சிங் எழுதும் கட்டுரை
-
பாலில் கொட்டும் பணம்!
மேற்குவங்க கிராமம் ஒன்றில் மிகச்சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் நாராயண் மஜும்தார். பால் தொழில்நுட்பத்தில் பி டெக் படித்த அவர் பல நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவத்துடன் தொழில் தொடங்கினார். இன்று அவரது ரெட் கவ் டெய்ரி மேற்குவங்கத்தின் மிகப்பெரிய பால் நிறுவனம். ஜி சிங் எழுதும் வெற்றிக்கதை.